ஆப்நகரம்

காவிரிக்காக கல்லணையில் உறுதியேற்பு; ஒன்றுகூடும் விவசாயிகள், கட்சியினர், திரையுலகினர்!

காவிரிக்காக தமிழகமே ஒன்று திரண்டு உறுதியேற்பு நடத்தவுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 1:28 pm
சென்னை: காவிரிக்காக தமிழகமே ஒன்று திரண்டு உறுதியேற்பு நடத்தவுள்ளது.
Samayam Tamil Cauvery Issue
காவிரி போராட்டம்


நான்கு மாநிலங்கள் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காலக்கெடு நிறைவடைந்தும், மத்திய அரசு வாரியம் அமைக்கவில்லை.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் 27ஆம் தேதி, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விவசாயிகள் கல்லணையில் ஒன்று திரள்கின்றனர். அங்கு உறுதியேற்பு ஒன்றுகூடல் நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், சீமான், வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரைப்படத்துரையினர், விவசாய சங்கத்தினர், தமிழ்த் தேசிய அமைப்பினர் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

அதில் கல்லணையில் மாமன்னன் கரிகால் சோழன் சிலை முன்பு, காவிரி உரிமையை மீட்க உறுதியேற்பு ஒன்றுகூடல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

தமது லட்சியத்தை நிறைவேற்ற, கடவுள் சிலைகள், முன்னோர் நினைவிடங்களில் சபதம் ஏற்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ளது. இதன்மூலம் சவாலான காரியங்களை செய்து முடிக்க, துணிவும், நம்பிக்கையும் பிறக்கும் என்பது நம்பிக்கை.

Tamilnadu Politicians, Celebrities will protest for Cauvery in Kallanai.

அடுத்த செய்தி