ஆப்நகரம்

தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து, தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 28 May 2017, 8:20 am
சென்னை: ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து, தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil tamilnadu private water industries starts indefinite strike from today
தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!


தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்காக மிகவும் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் நிலத்தடி நீரை எடுத்து, அதனை தூய்மைப்படுத்தி விற்கும் தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை மூடுமாறு அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முரளி, இரண்டு விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். ஒன்று தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் மீது அரசு எடுத்து வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இரண்டு குடிநீர் கேன்களுக்கான 18% ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அந்தப் போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

Tamilnadu private water industries starts indefinite strike from today.

அடுத்த செய்தி