ஆப்நகரம்

இரவு முதல் வெளுத்து வாங்கும் மழை; தமிழகம், புதுச்சேரியில் குளிர்ந்த வானிலை!

சென்னை: பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2018, 9:09 am
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil Rain


தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, அணைக்கரை, அம்பாசமுத்திரம், தாராசுரம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கடலூர், திருச்சி, மணப்பாறை, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை வருகிறது.

திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி