ஆப்நகரம்

மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்: டெங்கு உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்!

நாட்டிலேயே டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Feb 2018, 2:29 pm
நாட்டிலேயே டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu registered highest number of dengue deaths in the country for year 2017
மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்: டெங்கு உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்!



தமிழகத்தில் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று சென்னை வந்தது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையத்தைச் சேர்ந்த கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலில் இந்தக் குழு எந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்கள்.

இந்நிலையில், மாநிலம் வாரியாக நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், உயிரிழந்தவர்களின் எண்ணைிக்கையும் கணக்கு அறிக்கை செய்து வெளியிட்டது.

இதில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் அதிகமாக இருந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017 ம் ஆண்டு மட்டும், மொத்தம் 23,294 பேர் டெங்கு பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 65 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி