ஆப்நகரம்

கொரோனா: தமிழகத்தில் இன்று 45 பேர் உயிரிழப்பு, 3509 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனவால் இன்று பாதிக்கப்பட்டவர்கள், டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை...

Samayam Tamil 25 Jun 2020, 7:37 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் மேலும் புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona deaths today in tamil nadu


இன்று சென்னையில் அதிகபட்சமாக 1,834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பானது 47,650 ஆக உயர்ந்துள்ளது.


இன்று மேலும் 2,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமானோர்களின் எண்ணிக்கை 39,999 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இன்று கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 30,064 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி