ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா..! ஷாக் கொடுத்த சென்னை...

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 7:52 pm
தமிழகத்தில் மட்டும் இன்று மேலும் 601 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது . துபாயில் இருந்து வந்தவர்கள் 23 பேர், மலேசியா, குவைத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்களில் 13 பேர், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலிருந்து வந்தவர்களில் 50 பேர் என மொத்தம் 688 பேருக்கு இன்றைய நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா


இந்த எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 489 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4895 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

பலி எண்ணிக்கையின் படி இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மேலும் 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீப காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று அங்கு 22 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி