ஆப்நகரம்

ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிடில், பணியிடங்கள் காலியாகும்: பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்கு பணிக்கு திரும்ப எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2019, 6:46 pm
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Protest


அதில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

இன்று வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் விதி 17பி-யின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி