ஆப்நகரம்

பள்ளிக்கல்வி தரத்தை எப்படி உயர்த்தலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

Samayam Tamil 8 Feb 2018, 11:56 am
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
Samayam Tamil tamilnadu school education system will be modify says minister sengottaiyan
பள்ளிக்கல்வி தரத்தை எப்படி உயர்த்தலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்: அமைச்சர் செங்கோட்டையன்


சென்னையில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேரும் வகையில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும், மாணவர்களுக்கான மாற்றுக்கல்வியை வழங்குவது குறித்து முதல்வர், துணைமுதல்வர் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள்-மாணவர்கள் மோதல் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், யோகா, விளையாட்டுப் பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் பிரச்னைகள், மனஅழுத்தங்களை போக்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அடுத்த செய்தி