ஆப்நகரம்

ஒரு வருடமாக அப்பல்லோ நிர்வாகத்தை மிரட்டி வந்த தமிழக அரசு!

கடந்த ஒரு வருட காலமாக அப்பல்லோ நிர்வாகத்தை எடப்பாடி தரப்பினர் மிரட்டி வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

TNN 20 Dec 2017, 3:54 pm
கடந்த ஒரு வருட காலமாக அப்பல்லோ நிர்வாகத்தை எடப்பாடி தரப்பினர் மிரட்டி வருவதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu state that threatened the apollo administration for a year
ஒரு வருடமாக அப்பல்லோ நிர்வாகத்தை மிரட்டி வந்த தமிழக அரசு!


மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிரட்டி வருவதாக தங்கத்தமிழ்ச்செல்வன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயல்லிதாவை கொன்றது சசிகலா தான் என்றும் அவர்கள் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதனை மறுக்கத்தான் தற்போது வீடியோ வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ரூ.6000 வரை பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை.

சுயேட்சையாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனை எதிர்க்க எடப்பாடி அணியினர் சுமார் ரூ.150 கோடி வரை செலவு செய்து வருகின்றனர். நாளை நடக்கயிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த வீடியோ வெளியிடவில்லை என்றும், இந்த வீடியோவின் மூலம் மருத்துமனையில் ஜெயலலிதா நலமுடன் இருப்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் ஆதங்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி