ஆப்நகரம்

தலைதூக்கிய தமிழக மாணவர் போராட்டம்..!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழ் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 3 Sep 2017, 4:12 pm
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழ் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil tamilnadu students conducts the protest for anitha suicide
தலைதூக்கிய தமிழக மாணவர் போராட்டம்..!


நேற்று முதல் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிவேண்டி போராட்டங்களை தொடங்கினர். மே17 இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 200 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக மாணவர் அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிதாவின் மரணத்துக்கு நீதிக்கேட்டு தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நீட் தேர்வினை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும, கல்வி உரிமை முழுவதுமாக மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும், அதுவே அனிதாவின் மரணத்திற்கான நீதியாக இருக்க முடியும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும், 1176 மதிப்பெண்ணும், 196.75 கட் ஆஃப் மதிப்பெண்ணும் எடுத்த தமிழ் குழந்தை அனிதாவிற்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என்று இந்திய அரசு சொல்லுமானால், இந்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பதற்கு பதிலாக இழுத்து மூடுவதே மேல் என்று தமிழக மாணவர்கள் முழக்கமிட்டனர்.

கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். ஒற்றைக் கல்வி முறையை திணிப்பது என்பது பாசிசம். இவற்றை எதிர்த்து தமிழகம் முழுதும் போராட்டங்களை இளைஞர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று போரட்டத்தில் இந்த அறிவிக்கப்பட்டது. போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த மாணவ அமைப்பினரும், பல்வேறு சமூக இயக்கங்களும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Tamilnadu students conducts the protest for anitha suicide

அடுத்த செய்தி