ஆப்நகரம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடரும்!

தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் கூறிய பின்னரும், காலதாமதம் செய்வதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 8 Jan 2018, 12:00 pm
தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் கூறிய பின்னரும், காலதாமதம் செய்வதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil tamilnadu transport bus strike will continue till tn govt proceed request
கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடரும்!


பிடித்தம் செய்த நிலுவைத் தொகை 7,000 கோடி ரூபாயை உடனே வழங்கக் கோரியும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிறுத்தியும் மாநிலம் முழுவதும் 5வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் வாதத்தையும், ஊழியர்களின் கோரிக்கைகளையும் கேட்டு, நிலுவைதை்தொகையை உடனே படிப்படியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இதற்கு முன்பும் பல்வேறு காலக்கட்டங்களில் நீதிமன்றம் இது போல் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால், அதை மதிக்காமல், தமிழக அரசு தங்களுடைய 7,000 கோடி ரூபாயை திருடி வைத்துள்ளதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை தங்களது ஆர்ப்பாட்டம் தொடரும் என்று போக்குவரத்து ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

அடுத்த செய்தி