ஆப்நகரம்

நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை ஓயாது; எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

வரும் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 1 Nov 2017, 10:18 am
டெல்லி: வரும் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu will get heavy rain up to 5th
நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை ஓயாது; எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!


தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

சில இடங்களில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, வட தமிழக மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி வரை, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னா வளைகுடா அருகே வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu will get heavy rain up to 5th.

அடுத்த செய்தி