ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்து எங்கு, எப்போது மழை பெய்யும்; வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

சென்னை: மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 20 Dec 2018, 3:35 am
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதிய மழையில்லை. வறண்ட வானிலையே காணப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வெயில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
Samayam Tamil IMD


இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்வதை காண முடிகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் 21, 22 ஆகிய தேதிகளில் மழை பெய்யும்.

அதாவது தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் மழைக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி