ஆப்நகரம்

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வருமா? வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Feb 2019, 4:04 pm
தமிழகத்தில் நீண்டகாலமாக மழையில்லா வானிலை நிலவுகிறது. ஆனால் மறுபுறம் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் பஞ்சமும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil TN Rains


இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. நீலகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் உறை பனி நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் எனக் கூறியுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழையில்லை. குடிநீர் பற்றாக்குறையால் உப்புநீரை பயன்படுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் விலை கொடுத்து குடிநீரை வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நாவடிக்கை குறித்து, முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி