ஆப்நகரம்

Chennai Weather: உருவானது புதிய கிழக்கு திசை காற்று; இங்கெல்லாம் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

சென்னை: வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 9:49 am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து பொதுமக்களால் மீண்டு வர இயலவில்லை.
Samayam Tamil Rain


அதற்குள் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் புதிய கிழக்குத் திசை காற்று உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடக்க உள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 4ல் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று முதல் மழை அளவு குறையும் என்றும், வரும் 4, 5 தேதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்திருந்தார்.

அடுத்த செய்தி