ஆப்நகரம்

2047ம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் – வைகோ கணிப்பு

சென்னையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ 2047ம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என்று கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Apr 2018, 8:08 pm
சென்னையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ 2047ம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என்று கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Vaiko campaign 123


காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காமல் பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழகம் முழுவதும் இன்று எதிா்க்கட்சிகள் சாா்பில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பிரமாண்டமாக நடைபெற்ற போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பிரதமா் மோடிக்கு தங்கள் எதிா்ப்பை தொிவித்தனா்.

இதே போன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ கிண்டி அருகே கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டாா். போராட்டத்தின் போது கறுப்பு பலூன்களை பறக்க விட்டு பிரதமா் மோடிக்கு தனது எதிா்ப்பை தொிவித்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவா்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. வருகிற 2047ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியா தனது 100வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும். அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து பல மாநிலங்கள் தனி நாடாக சென்றிருக்கும். அதில் தமிழகமும் ஒரு மாநிலமாக இருக்கும். இந்த கருத்தை தொிவித்ததற்காக என் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் கவலை இல்லை என்று பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி