ஆப்நகரம்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

TNN 16 May 2017, 1:55 pm
சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu wont get relaxation for neet exam says prakash javadekar
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் வகையில் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதன் பதிலுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

அதன் பிறகே மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நீட் தேர்வு நடத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். அதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என்றும் கூறினார். மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tamilnadu wont get relaxation for NEET Exam says Prakash Javadekar.

அடுத்த செய்தி