ஆப்நகரம்

வேலை உறுதி சட்டம் வலியுறுத்தி பேரணி: வேல்முருகன் அறிவிப்பு!!

தமிழக அரசு வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2019, 5:57 pm
தமிழக அரசு வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழக வாழ்வுரிமைக் கட்சி பேரணி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பேரணி


திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதன் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. இதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேல்முருகன் கூறுகையில், ''மத்திய அரசு பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான உறுதி சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுபணிகளில் 60 ஆயிரம் பணிகளில் வடமாநிலத்தவரே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முறை கேடாக பணியில் அமர்த்தபட்டு உள்ளனர். தமிக இளைஞர்களுக்கு மறுக்கபடுகிறது. எனவே வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

இதை வழியுறுத்தி நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று கோட்டையை நோக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணி நடத்தும். இதை தமிழத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டு சூழ்ச்சியுடன், வஞ்சகத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது

ஜக்டோ ஜியோ 3 முறை போராட்டத்தை தள்ளி வைத்தது அப்போதே தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். 10 சதவீதம் பொருளாதாரம் இடஒதிக்கீட்டு மசோதா திட்டமிட்டு விரைவாக நிறைவேற்றக் காரணம் என்ன? இதற்கு காங்கிரஸ் அரசும் ஆதரவு அளிக்கிறது. இதற்கு ஒரே காரணம் வாக்கு வங்கிதான். ஸ்டெர்லை ஆலை பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது'' என்றார்.

அடுத்த செய்தி