ஆப்நகரம்

வேலூர் ஏஐடியுசி மாநில மாநாட்டில் தலைவர் மயங்கி விழுந்து பலி!

ஏஐடியுசி மாநில மாநாட்டில், தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவரான வாசுதேவன், மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jan 2019, 12:56 pm
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் நடைபெற்ற ஏஐடியுசி மாநில மாநாட்டில், தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவரான வாசுதேவன், மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil வேலூர் ஏஐடியுசி மாநில மாநாட்டில் தலைவர் மயங்கி விழுந்து பலி!
வேலூர் ஏஐடியுசி மாநில மாநாட்டில் தலைவர் மயங்கி விழுந்து பலி!


வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் ஏஐடியுசி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான இன்று மாநாடு துவங்கிய நிலையில் தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவரான வாசுதேவன்(57) மாநாட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேலூர் ஏஐடியுசி மாவட்டத்தலைவர் தேவதாஸ் ஆகியோர் வாசுதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மாநாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அடுத்த செய்தி