ஆப்நகரம்

மது பிரியர்களுக்கு இனி நுழைவுக் கட்டணம்; டாஸ்மாக் பார்களில் வருகிறது புது அறிவிப்பு!

சென்னை: டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 Dec 2018, 1:16 pm
தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பை உள்ளிட்டவை அடங்கும்.
Samayam Tamil Tasmac


மீறி பயன்படுத்தினால் கடும் தண்டனை வழங்கப்படும். யாராவது பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார்களா? என்று சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டாஸ்மாக் கடைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வருகின்றன. இங்கு செல்லும் மது பிரியர்கள் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அறிவிப்பால், இவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பும் என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கலாம் என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி