ஆப்நகரம்

தீபாவளி நெருங்குவதால் டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை

தீபாவளி நெருங்குவதால் டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 12 Oct 2017, 10:50 am
தீபாவளி நெருங்குவதால் டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tasmac employees not to take leave concerning diwali sale
தீபாவளி நெருங்குவதால் டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை


தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே டாஸ்மாக் விற்பனை சூடுபிடித்துவிடு வாடிக்கைதான். தீபாவளியில் டாஸ்மாக் கடைகள் கோடிக்கணக்கில் வருமானம் பார்ப்பதை ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரக மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அக்டோபர் 12ஆம் தேதி (இன்று) முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் விற்பனை விவரத்தை தினமும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் விடுப்பு கிடையாது!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கு இடையிலும் 11 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், கண்காணிப்பாளர்கள், கிளை உதவி மேலாளர்கள், மேலாளர்கள் ஆகியோர் இந்த நாட்களில் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி