ஆப்நகரம்

டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு: தமிழக அரசு...!

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNN 4 Jul 2019, 4:47 pm
சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil tasmac employees salary increased
டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு: தமிழக அரசு...!


இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.5600 லிருந்து ரூ.7500 ஆகவும், டாஸ்மாக் உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.4,200லிருந்து ரூ.6,500ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.7,500லிருந்து ரூ.9,500 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதேசமயம் டாஸ்மாக் ஊழியர்களுக்கான விற்பனை ஊக்கத் தொகை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

TASMAC employees salary increased.

அடுத்த செய்தி