ஆப்நகரம்

சரக்கு விற்பனை ஆயிர மடங்கு உயர்வு, அரசு கஜானாவே பத்தல!

கடந்த 16 ஆண்டுகளில் மதுபான விற்பனை ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.

Samayam Tamil 8 Feb 2020, 3:44 pm
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை மாநில அரசு எடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டு டாஸ்மாக் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் விற்பனை நடந்து வருகிறது. இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் தொடர்பான அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2003-2004 நிதி ஆண்டில் ரூ. 3 ஆயிரத்து 639 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
Samayam Tamil saraku


இந்த விற்பனை சதவீதம் ஆண்டுதோறும் 6 முதல் 10 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. தொடர்ந்து 2004-05ஆம் ஆண்டு ரூ. 4ஆயிரத்து 872 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இந்த சதவீதம் ஒருபுறமிருக்க, கடந்த 16 ஆண்டுகளில் இந்த விற்பனை ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது என்பதும் இந்த அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு நிர்வாக பணிகளை மேற்கொள்ள டாஸ்மாக் வருமானம்தான் முக்கிய அதரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே மதுவிலக்கை அமல்படுத்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை எனக் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த சூழலில் டாஸ்மாக் வருவாய் அறிக்கை அதை உறுதிப்படுத்தியுள்ளது.

கோவை லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா..! நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

2018-19 நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ. 31 ஆயிரத்து 157 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த தொகையில் விற்பனை வரியாக மட்டும் அரசுக்கு ரூ. 24ஆயிரத்து 294 கோடி கிடைத்துள்ளது. இந்த தகவல்கள் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அரசுக்கு 30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையைத் தரும் டாஸ்மாக் நிறுவனத்தை எப்படி நிரந்தரமாக மூட நினைப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மதுவிலக்கை அமல்படுத்த பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாகவும் அது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது கூறியிருந்தார்.

அன்பு காட்டுவதில் அளவுகோல் வைக்காதவர்: சீமானை வியக்கும் தம்பிகள்!

இப்போது ஆட்சியில் உள்ள அதிமுக தனது இறுதி பட்ஜெட்டை பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. இதனால், இந்த ஆட்சியில் இப்போதைய நேரத்தில் மதுவிலக்கு என்பதே சாத்தியம் இல்லை என மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்துபவர்கள் கருத்து கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி