ஆப்நகரம்

புத்தாண்டு கொண்டாட்டம்: டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.242 கோடி

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மட்டும் தமிழக அரசு தனது மது விறபனை நிறுவனமான டாஸ்மாக் மூலம் ரூ.242 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Samayam Tamil 2 Jan 2020, 1:39 pm
சென்னை: நடப்பாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு தனது மது விறபனை நிறுவனமான டாஸ்மாக் மூலம் ரூ.242 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது.

தேர்தல் திருவிழா... சரக்கு, லட்சக்கணக்கில் பணம் என களைக்கட்டுகிறது...

குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் குடிபிரியர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், அரசு இயந்திரம் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், நடப்பாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மட்டும் தமிழக அரசு தனது மது விறபனை நிறுவனமான டாஸ்மாக் மூலம் ரூ.242 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

முன்னதாக 2018ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.243 கோடியும், 2017ஆம் ஆண்டில் ரூ.230.52 கோடிக்கும் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி