ஆப்நகரம்

டாஸ்மாக் விற்பனையில் ரூ.200 கோடி சரிவு

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, இதுவரையிலும் ரூ.200 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

TNN 2 Dec 2016, 1:51 pm
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, இதுவரையிலும் ரூ.200 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tasmac sales hits down of rs 200 crore
டாஸ்மாக் விற்பனையில் ரூ.200 கோடி சரிவு


கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், புதியதாக ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதனால், நாடு முழுவதும் கடும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி, டாஸ்மாக் வரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆரம்ப நாட்களில் செல்லா ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டாலும், பின்னர் அதற்கு படிப்படியாக தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த நவம்பர் 8ம் தேதி தொடங்கி, இதுவரையிலும் ரூ.200 கோடி வரை விற்பனை பாதித்துள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள, 6,292 டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாகரூ.68 கோடி வரையும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சராசரியாக, ரூ.95 கோடி ரூபாய் வரையும் விற்பனை நடக்கும்.

ஆனால், ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு காரணமாக, நகரங்களை விட, கிராமங்களில், மது விற்பனை கடுமையாகப் பாதித்துள்ளது. கடைகளில் சில்லறை தட்டுப்பாடு நிலவுவதால், ரூ.2000 நோட்டுகளை வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால், தினமும் சராசரியாக, எட்டு முதல், 10 கோடி ரூபாய்க்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

TASMAC sales hits down of Rs.200 crore from November 8 to November 30.

அடுத்த செய்தி