ஆப்நகரம்

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளை!

கோவில்பட்டி அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளைப்படிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2018, 11:14 am
கோவில்பட்டி அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளைப்படிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tasmac supervisor was beaten and robbed his money
டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளை!


கோவில்பட்டி அருகேயுள்ள ஓணமாக்குளத்தினை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாலமுருகன். இவர் மந்திதோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல பணியினை முடித்து விட்டு, டாஸ்மாக் விற்பனை வசூலான 53 ஆயிரத்து 690 ரூபாயை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பைக்கில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பாலமுருகன் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வந்த மர்ம நபர்கள், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி, பணப்பையை பறித்து தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த பாலமுருகன், தனது செல்போன் மூலம் கோவில்பட்டி காவல்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர் காயமடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். நள்ளிரவில், டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணம் கொள்ளைப்படிக்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி