சென்னை: மாணவர்களுக்கு இனி டி.சிக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் கல்வித்துறை வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் சங்கம், அமைச்சக பணியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்தல், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியரிகளின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்தார். மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் கார்டு வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இனி மாணவர்களின் முழு விவரங்களும் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்படும் என்றும், மாற்றுச் சான்றிதழ்கள் தேவைப்படாது என்றும் கூறினார். மேலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 14 விதமான பொருட்களும் இனி நேரடியாக பள்ளிகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
TC will be changed as Smart Cards soon says Minister Sengottaiyan.
சென்னை தியாகராய நகரில் கல்வித்துறை வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் சங்கம், அமைச்சக பணியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்தல், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியரிகளின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்தார். மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் கார்டு வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இனி மாணவர்களின் முழு விவரங்களும் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்படும் என்றும், மாற்றுச் சான்றிதழ்கள் தேவைப்படாது என்றும் கூறினார். மேலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 14 விதமான பொருட்களும் இனி நேரடியாக பள்ளிகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
TC will be changed as Smart Cards soon says Minister Sengottaiyan.