ஆப்நகரம்

“சிரித்து, அழுது மோடி நாடகமாடுகிறார்” : திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்

“சிரித்து, அழுது மோடி நாடகமாடுகிறார்” : திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்

TOI Contributor 14 Nov 2016, 1:17 pm
பிரதமர் நரேந்திர மோடி மேடையில் அழுது நாடகமாடுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.
Samayam Tamil tcc president thirunavukarasar criticize prime minister modi
“சிரித்து, அழுது மோடி நாடகமாடுகிறார்” : திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் மூலம் நாட்டு மக்களை பெரும் இன்னலுக்கு பிரதமர் மோடி உள்ளாக்கியுள்ளார். பொதுமக்களை கஷ்டப்படுத்திவிட்டு பொது மேடைகளில் மட்டும், நான் சாக தயார் என்றும், பொது இடத்தில் வைத்து என்னை எரித்தாலும் மக்கள் பணியாற்றுவேன் என்றும் கூறிவருகிறார். அவர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தில் இருந்து தப்பிக்கவே அவர் நாடகமாடுகிறார். மேடையில் பேசும் போது உணர்ச்சிவயப்பட்டு அழுகிறார். மேலும், பிரதமர் மோடி மோனோ ஆக்டிக் செய்கிறார் என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியதைப்போல், பிரதமர் மோடி மாறி, மாறி நாடகமாடுகிறார். இதை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி