ஆப்நகரம்

மாணவியிடம் சேட்டை செய்த பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி

மாணவியின் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர் கண்ணன் பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்புக்கே சென்று அவரைத் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Samayam Tamil 22 Oct 2018, 6:21 pm
மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் அவரது வகுப்புக்கே தேடிச்சென்று அடி வெளுத்தனர்.
Samayam Tamil teacher-attacked


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கணித ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

காலாண்டு தேர்வு விடுமுறையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது அந்த மாணவியிடம் ஆசிரியர் கண்ணன் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்.

அப்போது கூச்சலிட்டு அவரிடமிருந்து தப்பிச்சென்ற மாணவி பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர் கண்ணன் பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்புக்கே சென்று அவரைத் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ஆசிரியர் கண்ணனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி