ஆப்நகரம்

பள்ளி வளாகத்திலேயே இளம்பெண்ணுடன் உல்லாசம்.! சிக்கிய ஆசிரியர்.. புரட்டியெடுத்த கிராம மக்கள்..

நாமக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை பார்த்த ஊர் மக்கள் ஆசிரியரை அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2019, 1:15 pm
நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் தமிழகத்தில் சேர்ந்த பள்ளி வளாகத்திற்குள்ளேயே பாடம் கற்பிக்கும் ஆசிரியரின் இச்சையான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் , உடுப்பம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
Samayam Tamil 1


இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் சரவணன். இதே பள்ளியின் அருகே அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் பணிபுரியும் ஜெயந்தி என்ற பெண்ணுடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் எல்லை மீறியதால் கடந்த செவ்வாய் கிழமை அன்று பள்ளி முடிந்த பின்பு மாணவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஜெயந்தி சரவணனை சந்தித்துள்ளார்.

26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்!!

பள்ளியில் யாரும் இல்லாததால் இருவரும் அங்கு இருந்த தனி அறையில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை சுதாரித்துக் கொண்ட அப்பகுதியில் இருந்து கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து ஆசிரியர் சரணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கள்ளக்காதலால் மனைவி கொலை.! கணவனுக்கு ஆயுள்தண்டனை அளித்த சென்னை உ.நீ.மன்றம்..

பள்ளியிலேயே நடந்த இந்த நிகழ்வு உடுப்பம் கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் அங்கு ஒன்றுகூடிய ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ மாணவிகள் பயிலும் பள்ளியில் குற்றம் செய்த ஆசிரியர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஊர்மக்கள் அனைவரும் தலைமை ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி