ஆப்நகரம்

9 ஆம் வகுப்பு மாணவிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் கைது!

சென்னையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Feb 2019, 10:26 am
சென்னையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil download


சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் அருண் குமார் என்பவர் கணினி அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார். இவர் 9 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு தனியாக அழைத்து, அவரிடம் தவறாக நடந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறிவிடக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். மேலும் தான் பள்ளிக்கு செல்லப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, அருண் குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண் குமாரை கைது செய்தனர். இதுபோல் மற்ற மாணவிகளிடம் அருண் குமார் முறைதவறி நடந்துகொண்டாரா என்று விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி