ஆப்நகரம்

சூடு வைத்த ஆசிரியைக்கு ஜாமின் மறுப்பு

பள்ளி மாணவர்களுக்கு கற்பூரத்தை கொண்டு சூடு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியைக்கு ஜாமின் வழங்க உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

TNN 13 Jun 2016, 5:21 pm
சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர் பேட்டை அருகிலுள்ள பாலி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், சரியாக படிக்கவில்லை என கூறி நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பூரத்தால் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil teacher who punishes students with camphor fire not getting bail
சூடு வைத்த ஆசிரியைக்கு ஜாமின் மறுப்பு


இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டதால்,இந்த கொடூர செயலில் ஈடுபட்ட வைஜெயந்தி மாலா என்ற ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் சூடு வைக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட வைஜெய்ந்தி மாலா பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆசிரியை வைஜெயந்தி மாலாவுக்கு ஜாமின் கேட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமின் வழங்கமுடியாது என தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி