கிருஷ்ணகிரி அருகே 112 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் திருமதி. வேதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பர்கூர் வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளை கல்வி அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன், பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான பள்ளிச்சீருடைகள், புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
அதன்பின், பள்ளி குழந்தைகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட கிராம மக்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டு மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு களித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் திருமதி. வேதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பர்கூர் வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளை கல்வி அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன், பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான பள்ளிச்சீருடைகள், புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
அதன்பின், பள்ளி குழந்தைகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட கிராம மக்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டு மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு களித்தனர்.