ஆப்நகரம்

உண்ணாவிரதம்: மயங்கி விழும் ஆசிரியர்களால் பரபரப்பு!!

தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் சிலர் மயங்கி விழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 12:34 pm
தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் சிலர் மயங்கி விழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்


தமிழத்தில் ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி அரசுபள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. 2012-ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருக்கக் கூடாது என்றும் அதை உடனடியாக களைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று தங்க வைக்கப்பட்டனர். அங்கும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதால். இன்று மட்டும் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி