ஆப்நகரம்

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தும்!

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 2:05 pm
நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil dc-Cover-ft20ps5i2jn7skkav3af8jc2a3-20170206015058.Medi.


மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முடிவெடுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் தடை விதிக்க நேரிடும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒரு மணிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் , நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தும் என்று உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி