ஆம்பூரில் ஒரு டீக்கடைக்காரர், பிளாஸ்டிக் பைகள் தடையை அடுத்து, தன் வாடிக்கையாளர்களுக்கு இதற்காக 120 எவர்சில்வர் தூக்குச் சட்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தினமும் பார்சல் டீ வாங்க வருபவர்கள் இதில் டீ வாங்கிச் செல்கின்றனர். இவரது இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அன்று, தமிழக அரசு 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டது.
வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்களில் மாநகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை, சுகாதார துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்துறை அதிகாரிகள் அடங்கிய 10,000 குழுவினர் தமிழகம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டல வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.
கடந்த 3 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 21.67 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜார்ஜ் டவுன் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளார் சேட்டு என்கிற ஒரு டீக்கடைக்காரர். கடந்த ஜனவரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனையடுத்து டீ கடைகளில் பார்சல் டீ வங்கிச் செல்வோருக்கு பிளாஸ்டிக் பைகளில் பார்சல் வழங்குவது தவிர்க்கப்பட்டது. டீக்கடைக்க்காரர் சேட்டு, தன் வாடிக்கையாளர்களுக்கு இதற்காக 120 எவர்சில்வர் தூக்குச் சட்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தினமும் பார்சல் டீ வாங்க வருபவர்கள் இதில் டீ வாங்கிச் செல்கின்றனர். இவரது இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அன்று, தமிழக அரசு 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டது.
வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்களில் மாநகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை, சுகாதார துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்துறை அதிகாரிகள் அடங்கிய 10,000 குழுவினர் தமிழகம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டல வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.
கடந்த 3 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 21.67 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜார்ஜ் டவுன் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளார் சேட்டு என்கிற ஒரு டீக்கடைக்காரர். கடந்த ஜனவரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனையடுத்து டீ கடைகளில் பார்சல் டீ வங்கிச் செல்வோருக்கு பிளாஸ்டிக் பைகளில் பார்சல் வழங்குவது தவிர்க்கப்பட்டது. டீக்கடைக்க்காரர் சேட்டு, தன் வாடிக்கையாளர்களுக்கு இதற்காக 120 எவர்சில்வர் தூக்குச் சட்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தினமும் பார்சல் டீ வாங்க வருபவர்கள் இதில் டீ வாங்கிச் செல்கின்றனர். இவரது இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.