ஆப்நகரம்

சென்னை-ஏலகிரி ரயிலின் கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் மீட்பு!!

சென்னை-ஏலகிரி ரயிலின் கழிப்பறையில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 Nov 2019, 12:37 pm
சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. ரயில் ஜோலார்பேட்டையை இரவு 10 மணிக்கு வந்தடைந்தபோது ரயில்வே துப்புரவு தொழிலாலாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றனர். அப்போது கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


உடனே ரயில்வே துப்புரவு தொழிலாளர்கள் ரயில்வே காவல் துறைக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''முதற்கட்ட விசாரணையில் கழுத்து அறுபட்டவர் மாதங்கி ரவி என்பதும், தெலங்கானாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவரை மீட்கும்போது குடிபோதையில் இருந்தார். பிராந்தி பாட்டிலால் அவரே அவரது கழுத்தை அறுத்துக் கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆதார் அட்டை கிடைத்துள்ளது. அந்த முகவரிக்கு தொடர்பு கொண்டுள்ளோம்.

தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு; கோவை இரட்டை கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு!

தற்போது ரவியின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

லவ் பிரேக்-அப்; பிளாக்மெயில்; இங்க கதையே வேற- ஆசிட் அடித்த இளம்பெண்!

அடுத்த செய்தி