ஆப்நகரம்

சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தெலுங்கானா அரசு

தெலுங்கானாவிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டை தனதாக்கி கொண்ட சசிகலா அந்த வீட்டிற்கு ஒழுங்காக வரி செலுத்தாதால் அவருக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 16 Feb 2017, 4:34 pm
ஹைதராபாத்: தெலுங்கானாவிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டை தனதாக்கி கொண்ட சசிகலா அந்த வீட்டிற்கு ஒழுங்காக வரி செலுத்தாதால் அவருக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil telugaanaa govt notice to sasikala
சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தெலுங்கானா அரசு


ஜெயலலிதா தான் சினிமாவில் நடித்த காலக்கட்டங்களில் அடிக்கடி ஹைராபாத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 1967-ம் ஆண்டு ஹைதராபாத்திலுள்ள ஸ்ரீநகர் காலனியில் ஜெயலலிதா ஒரு கட்டிடத்தை வாங்கியிருந்தார். மேலும் செகண்டராபாத்திலுள்ள மாரேட்பள்ளி ராதா காலனியில் ஒரு கட்டிடத்தை ஜெயலலிதா வாங்கியிருந்தார். இந்த குடியிருப்புக்கு ஜெ.ஜெ கார்டன் எனப்பெயரிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த குடியிருப்புக்கு சசிகலா நடராஜன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சொத்துவரி கட்டவில்லை இதனால் சொத்து வரியாக ரூ.35,424 கட்டவேண்டும் என்று சசிகலாவுக்கு தெலுங்கான அரசின் கீழ் இயங்கிவடும் செகண்டராபாத் கண்டோமெண்ட் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

telugaanaa govt., notice to sasikala

அடுத்த செய்தி