ஆப்நகரம்

திருவண்ணாமலை கோயில் யானை ருக்கு திடீர் மரணம் - சோகத்தில் பக்தர்கள்

கடந்த 23 வருடங்களாக திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயிலில் ஆன்மிக சேவை செய்து வந்த யானை ருக்கு நள்ளிரவு 12மணிக்கு உயிரிழந்தது.

Samayam Tamil 22 Mar 2018, 3:59 pm
கடந்த 23 வருடங்களாக திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயிலில் ஆன்மிக சேவை செய்து வந்த யானை ருக்கு நள்ளிரவு 12மணிக்கு உயிரிழந்தது.
Samayam Tamil rukku


திருவண்ணாமலை, அண்ணாமலை கோயிலில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வந்த யானை ருக்குவுக்கு வயது 30. நேற்று கோயிலின் 5ம் பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்போது இரும்பு தடுப்புச் சுவரில் பலமாக இடித்துக் கொண்டது. இதனால் அதன் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மிகவும் உடல் நலம் பாதித்தது.
மருத்துவர்கள் யானைக்கு தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காப்பாற்ற முடியாமல் நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்தது.


மிகவும் துறு துறுவென இருக்கும் ருக்கு, கோயிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானது. அதனால் ருக்கு உயிரிழந்த சம்பவம் அனைத்து பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை முதல் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட நிலையில், கோயிலின் வெளிப்புற சுற்றுச் சுவர் பக்கத்தில் ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி