ஆப்நகரம்

கோவில் திருவிழா விவகாரம் : முட்டி போட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்

குடியாத்தம் அருகே கோவில் திருவிழாவை இரண்டு சமுதாய மக்கள் தனித்தனியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் சேர்ந்து திருவிழாவை நடத்த கோரி நூதன முறையில் முட்டி போட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

Samayam Tamil 5 Feb 2019, 3:56 pm
குடியாத்தம் அருகே கோவில் திருவிழாவை இரண்டு சமுதாய மக்கள் தனித்தனியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் சேர்ந்து திருவிழாவை நடத்த கோரி நூதன முறையில் முட்டி போட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
Samayam Tamil ooo


வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அருகேயுள்ள கே.ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் ஆலயம் உள்ளது.இந்த கிராமத்தை சேர்ந்தஇரண்டு சமூதாயத்தினர் கடந்த 5 பரம்பரையாக அங்குள்ள ஸ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் இணைந்து திருவிழாவை நடத்தி வந்தனர் . கடந்த சில வருடங்களாக இரு சமூதாயத்தினர் தனித்தனியாக வெவ்வேறு தேதிகளில் திருவிழாவை நடத்தி வருகின்றனர் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு மக்கள் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்டியிட்டு கொண்டே நுழைவாயில் முதல் ஆட்சியர் குறைதீர்வு கூட்டம் வரை வந்தனர். இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அடுத்த செய்தி