ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: சற்று முன் வெளியான அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2021, 1:51 pm
சென்னை: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராட்ட காலங்களுக்கு ‘பணிபுரியவில்லை என்றால் ஊதியம் இல்லை’ என்ற கொள்கை அடிப்படையில் ஊதியம் தரப்படவில்லை. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதனிடையே, வேலை நிறுத்த போராட்டம் காலமும், தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி 110இன் கீழ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், போராட்ட காலத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்: மது, அசைவ பிரியர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

தமிழக அரசாணை


ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பாதித்திருந்தால் சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி