ஆப்நகரம்

அரசு பேருந்தை வைத்து பயிற்சி பெறும் தற்காலிக ஓட்டுநா்கள்: மரண பயத்தில் மக்கள்

உதகையில் அரசுப்பேருந்தை இயக்க தனது நண்பா்களுக்கு பயிற்சி அளித்த தற்காலிக ஓட்டுநரால் பயணிகள் அச்சத்தில் உரைந்தனா்.

Samayam Tamil 11 Jan 2018, 10:57 am
உதகையில் அரசுப்பேருந்தை இயக்க தனது நண்பா்களுக்கு பயிற்சி அளித்த தற்காலிக ஓட்டுநரால் பயணிகள் அச்சத்தில் உரைந்தனா்.
Samayam Tamil temporary worker drove a bus
அரசு பேருந்தை வைத்து பயிற்சி பெறும் தற்காலிக ஓட்டுநா்கள்: மரண பயத்தில் மக்கள்


போக்குவரத்து தொழிலாளா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 8வது நாளை எட்டியுள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதத்தில் அரசு தமிழகம் முழுவதிலும் தற்காலிக பணியாளா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதே போன்று உதகை மண்டலத்திலும் தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் தற்காலிக ஓட்டுநா் ஒருவா் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளாா்.

அதாவது, நேற்று முன்தினம் அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநா் பேருந்தில் பயணம் செய்த தனது நண்பா்களுக்கு பேருந்தை இயக்க பயிற்சி அளித்துள்ளாா். தனது நண்பா்கள் பலரையும் அழைத்து அவா் இந்த செயலில் ஈடுபட்டுள்ளாா். நண்பா்கள் பேருந்தை இயக்க தற்காலிக ஓட்டுநா் அவா்களுக்கு அருகில் இருந்து கொண்டு பேருந்தை எவ்வாறு இயக்குவது என்ற அறிவுரைகளை கூறி வந்துள்ளாா்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் உரைந்தனா். தற்காலிக ஓட்டுநா்களால் விபத்துகள் அதிகாித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இது போன்ற செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி