ஆப்நகரம்

நெடுவாசல் போராட்டத்திற்கு சென்ற 10 பேர் கைது

நெடுவாசல் போராட்டத்திற்கு கோவையில் இருந்து சென்ற 2 பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

TNN 15 Apr 2017, 8:04 pm
கோவை: நெடுவாசல் போராட்டத்திற்கு கோவையில் இருந்து சென்ற 2 பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil ten arrested including two women who went neduvasal protest
நெடுவாசல் போராட்டத்திற்கு சென்ற 10 பேர் கைது


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நெடுவாசலில் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் மீண்டும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

குறிப்பாக, புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையிலிருந்து 10 பேர் ரயிலில் புறப்பட்டனர். ரயிலில் முழக்கமிட்ட படி சென்ற 2 பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
Ten arrested including two women who went Neduvasal protest

அடுத்த செய்தி