ஆப்நகரம்

மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு: ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Samayam Tamil 3 Aug 2021, 3:48 pm
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
Samayam Tamil medical students


இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (ஆகஸ்ட்03) விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!
அப்போது ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டினார். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா, இல்லையா எனவும் ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.
பள்ளிகளை திறக்கும் திட்டமில்லை: உறுதியாக சொன்ன அமைச்சர்!இதற்கு பதிலளிக்க ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி