ஆப்நகரம்

லாரி வேலை நிறுத்தத்தால் இவ்வளவு பாதிப்பா?

லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 3:00 pm
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் வாகன உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil lorry strike


கொரோனா நெருக்கடியை சமாளிக்க வாகன உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றவேண்டும், வாகனங்களுக்கு ஆவணம் புதுப்பிக்க டிசம்பர் 20 வரை அவகாசம் வழங்க வேண்டும். மோட்டார் தொழிலுக்கு நலவாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் பல இடங்களில் இயங்காத சூழல் நிலவுகிறது.

கர்நாடகா பொதுமுடக்கம் ரத்து: எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை?

இந்த வேலைநிறுத்தம் குறித்து, லாரி உரிமையாளர்கள் சம்மளேன மாநிலத் தலைவர் முருகன் வெங்கடாசலம் கருத்து தெரிவித்துள்ளார். “கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் தமிழ்நாட்டில் வாடகைக்கு இயக்கப்படும் லாரி, வேன், கார், உள்பட 12 லட்சத்து 91 ஆயிரம் வாகனங்கள் இயங்கவில்லை. இதன் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் முடங்கும்” என கூறியுள்ளார்.

கொரோனா: மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு பாதிப்பு!

கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின் கட்டணம் செலுத்துவதில் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி