ஆப்நகரம்

வீட்டு உரிமையாளரை தாக்கிய நபர் கைது

வேலூர் அருகே வீட்டு உரிமையாளர்களை தாக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 26 Apr 2017, 5:58 pm
வேலூர்: வேலூர் அருகே வீட்டு உரிமையாளர்களை தாக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil tenant held for assaulting landlord landlady in vellore
வீட்டு உரிமையாளரை தாக்கிய நபர் கைது


வேலூர் பிஷப் டேவிட் நகரில் செல்வின் என்பவரது வீட்டின் ஒரு பகுதியில் யேசுராஜா என்பவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு இருப்பவருக்கும் ஒத்துப்போகாததையடுத்து, வீட்டை காலி செய்யும்படி 18 மாதங்களுக்கு முன்பாகவே செல்வின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டை காலி செய்ய முடியாது என யேசுராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பிறகு வீட்டு வாடகையான ரூ.2,500 கொடுப்பதை நிறுத்தியுள்ளார். யேசுராஜா தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று இரவு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.

இதில் செல்வின் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். செல்வினை காப்பாற்ற வந்த அவரது மனைவி ஜோதியை யேசுராஜாவும் அவரது மகனும் தாக்கியதில் அவருக்கும் அடிப்பட்டது. பின்னர் இருவரும் வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் தெற்கு காவல்துறையினர் யேசுராஜாவை கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய அவரது மகனை தேடி வருகின்றனர்.

A 60-year-old man has been arrested for allegedly assaulting his landlord and landlady in Vellore.

அடுத்த செய்தி