ஆப்நகரம்

ஜெ., நினைவு மண்டபத்திற்கு பிப்ரவரியில் டெண்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைப்பதற்கான டெண்டர் பிப்ரவரி மாதம் விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2018, 5:50 pm
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைப்பதற்கான டெண்டர் பிப்ரவரி மாதம் விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tender to build jayalalithaa memorial likely to be released in feb
ஜெ., நினைவு மண்டபத்திற்கு பிப்ரவரியில் டெண்டர்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. நினைவு மண்டபத்தின் தோற்றத்திற்கு 10 விதமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் பிப்ரவரி 7ஆம் தேதி டெண்டர் விடப்படும் என்றும் ரூ.43.63 கோடி முதல் இந்த டெண்டர் தொகை இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளில் (பிப்ரவரி 24) கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டில் முழுதும் கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி