ஆப்நகரம்

கொரோனா ஊரடங்கில் நடைபெற்ற இந்த வேலை: வளைத்த போலீஸார்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தடை உத்தரவை மீறி இரவில் திருப்பூருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி பண்டல்களை ஏற்றிச் சென்ற லாரியை ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்தனர் .

Samayam Tamil 14 Apr 2020, 6:06 pm

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என்றும் போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களைத் தவிர பிற சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும் காவல்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா: இன்று பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு!

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போலீஸார் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆலங்குளம் பகுதியில் இருந்து அதிக பாரத்துடன் வந்த லாரியை மடக்கி சோதனையிட்ட போது அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி பண்டல்கள் இருந்துள்ளது. அங்கிருந்து 144 தடை உத்தரவையும் மீறி , எந்தவித அனுமதியும் இல்லாமல் திருப்பூருக்கு செல்ல இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பீடி கம்பெனி உரிமையாளர் செல்வராஜ், லாரி ஓட்டுநர் தேனியைச் சேர்ந்த மகேந்திரன் , கிளினர் முத்துக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து பீடிபண்டல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரைணை நடத்தி வருகின்றனர் .

அடுத்த செய்தி