ஆப்நகரம்

மே.வங்கத்தில் கைதான ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் வசித்தவர்

மேற்குவங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி என கூறப்படும் நபர் திருப்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

TNN 6 Jul 2016, 11:09 am
திருப்பூர்: மேற்குவங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி என கூறப்படும் நபர் திருப்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil terrorist arrest in wb lived in thirupur 6 years
மே.வங்கத்தில் கைதான ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் வசித்தவர்


மேற்குவங்க மாநிலம் மிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த முசுருதீன் என்பவர், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாலும், ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஆறு சிம் கார்டுகள், இரண்டு போலி வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் திருப்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்த விஷயம் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு மளிகை கடை நடத்தி வந்த அவர், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறப்படுகிறது.

முசுருதீனின் சகோதரர் மற்றும் மனைவியை கைது செய்ய திருப்பூர் வந்த போலீசார் மற்றும் உளவுத்துறையினர், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி