ஆப்நகரம்

அரக்கோணத்தில் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்குப் போட்டி

போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் பூனே ஆகிய படை பிரிவுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்துக்கொண்டனர். திறமையாகவும் சாதூர்யமாக குறுகிய நேரத்தில் உபகரணங்கள் உதவியோடு மீட்பு பணிகளில் மேற்கொள்ளும் திறன் இதன் மூலம் சோதிக்கப்படுகிறது.

Samayam Tamil 3 Jan 2019, 10:38 pm
அரக்கோணம் தேசிய பேரிட மீட்பு மேலாண்மை படை வளாகத்தில் மண்டல அளவிலான ஒரு நிமிட திறமை ஆய்வு போட்டிகளில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்
Samayam Tamil fdf


வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பம் பகுதியில் தேசிய பேரிட மீட்பு மேலாண்மை படையின் 4வது பெட்டாலியன் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் மண்டல அளவிலான ஒரு நிமிட திறமை ஆய்வு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இப்போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் பூனே ஆகிய படை பிரிவுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்துக்கொண்டனர். போட்டிகளில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டல், ரசாயன கதிர் வீச்சு விபத்துக்களை கவனமாக கையாளும் முறை, விபத்துக்களில் இடர்பாடுகளைக் களைதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர்.

திறமையாகவும் சாதூர்யமாக குறுகிய நேரத்தில் உபகரணங்கள் உதவியோடு மீட்பு பணிகளில் மேற்கொள்ளும் திறன் இதன் மூலம் சோதிக்கப்படுகிறது. அரக்கோணம் தேசிய பேரிட மீட்பு மேலாண்மை 4வது படை பிரிவின் கமாண்டர் ரேகா நம்பியார் மேற்பார்வையில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி